tamilnadu

img

விவசாயிகள் சங்கம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு இயக்கம்

மன்னார்குடி,  ஜூன் 25-  தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டக்குழு, மன்னார்குடியில் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் விஎஸ்.கலியபெருமாள், துணை தலைவர் எம்.சேகர், பொருளாளர் எஸ்.சாமிநாதன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.பவுன்ராஜ், டி.சண்முகம், ஜி.துரைராஜ், வி.பூசாந்திரம், மன்னார்குடி நகர செயலாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். வருமான வரி வரம்புக்குள் வராத குடும்பங்களுக்கு ஆறு மாதத்திற்கு மாதந்தோறும் ரூ.7500 வழங்க வேண்டும். ஒரு நபருக்கு 10 கிலோ வீதம் ஆறு மாதத்திற்கு இலவசமாக உணவு தானியம் வழங்க வேண்டும்.

விவசாயத் தொழிலாளர் குடும்பங்களின் கடன் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய  கடிதங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக மறைந்த தலைவர் கே.வரதராஜனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஎஸ் கலிய பெருமாள் முன்னிலை வகித்தார். தோழர் வரதராஜன் உருவப்படத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். சங்க மாவட்ட நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கட்சியின் நகர குழு செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய குழு உறுப்பினர் கேடி.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;