tamilnadu

img

ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி 

 திருவாரூர், செப்.19- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் போஷான் அபியான் (ஊட்டச்சத்து மாதம்) விழிப்பு ணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் இராஜம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துத் துறை ஸ்டான்லி மைக்கேல், குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஆய்வாளர் முனைவர் இர.புவ னேஸ்வரி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.