tamilnadu

img

என்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களுக்கு விருது

மன்னார்குடி, பிப்.2-  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழ கத்தில் சிறந்த என்.எஸ்.எஸ். திட்ட அலுவ லர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந் தர் பி.மணிசங்கர் தலைமையில் நடை பெற்றது. மயிலாடுதுறையை அடுத்த  மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி. கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜி.கார்த்திகேயன் தொடர்ந்து 5 ஆண்டு களாக கல்லூரியின் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலராக செயலாற்றி, இந்திய அளவில் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு சிறப் பாக செயலாற்றியதற்காக 2018-19 ம் ஆண் டிற்கான விருதினையும்,  ஏ.வி.சி. கல்லூரி டீன் டாக்டர் எஸ்.மயில் வாகனன் 5 ஆண்டுகள்  என்.எஸ்.எஸ்.சில் பணியாற்றியமைக்காக சிறப்புச் சான்றி தழையும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.மணிசங்கர்  வழங்க பெற்றுக் கொண்டனர். பல்க லைக்கழக பதிவாளர் டாக்டர் ஜி.கோபிநாத், மாநில என்.எஸ்.எஸ். அலுவலர் எம்.செந்தில்குமார், பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ. லெட்சுமிபிரபா ஆகியோர் கலந்து கொண்ட னர்.  விருதுகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த பேராசிரியர்களை கல்லூரி யின் தலைவர் என்.விஜயரங்கன், செயலர் கி.கார்த்திகேயன், பொருளாளர் என்.ஞான சுந்தர், கல்லூரியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் முதல்வர் டாக்டர் ஆர்.நாக ராஜன், பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.