tamilnadu

கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்கம்: மருந்தாளுனர் சங்கம் அழைப்பு

மன்னார்குடி, ஆக.10-  திருவாரூர் மாவட்ட மருந்தாளுனர் சங்க மாவட்டத் தலைவர் மணி வண்ணன், செயலாளர் தியாகராஜன் கொரோனா பணியாளர்களு க்கான கோரிக்கைகளை வலியுறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், காலி யாக உள்ள 750 மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கொ ரோனா தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் எண்:95 மாஸ்க் உள்ளி ட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த மருந்தாளுனர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். குடும்ப வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் நிபந்தனையின்றி அரசு  பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆக.10 முதல் ஆக.14 வரை 5 நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி யாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.