tamilnadu

வாலிபர் கழுத்தில் பாய்ந்த இரும்புத் துண்டு அகற்றம் மதுரை வேலம்மாள் மருத்துவமனை சாதனை

மன்னார்குடி, ஏப்.15-இந்தியாவைச் சேர்ந்த 24 வயது இளைஞர், துபாயில்உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்தார். இப்போது ஒரு செ.மீ. அளவுள்ள இரும்புத் துண்டு எதிர்பாராதவிதமாக அவரது இடது கழுத்தில் ஆழமாக பாய்ந்தது. உடன் அந்நிறுவனம் மேல் சிகிச்சைக்காக அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. மதுரைவேலம்மாள் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு காது, மூக்கு, தொண்டை நல மருத்துவரான ராஜவேல் தீவிர சிகிச்சை மேற்கொண்டு சிஆர்எம் எனும் கருவி மூலம் இரும்புத்துண்டை கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் இரும்புத் துண்டை அகற்றினார். வெற்றிகரமாக சிகிச்சையளித்த டாக்டர் ராஜவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினரை வேலம்மாள் கல்விக்குழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் மற்றும் மருத்துவக்கல்லூரி டீன் ராஜா முத்தையா ஆகியோர் பாராட்டினர்.  

;