tamilnadu

img

உள்ளாட்சித் துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மார்ச் 16- திருவாரூரில் ஆட்சியர் அலுவ லகம் முன்பாக ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு உள்ளாட்சித் துறை மற்றும் என்.எம்.ஆர். ஊழி யர் சங்கத்தின் மாவட்டத் தலை மையில் கே.கோவிந்தராஜ் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி கோரிக்கைகள் வெற்றிப் பெற வாழ்த்தி உரையாற்றி னார். சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முரு கையன், சங்க மாவட்ட செயலாளர் கே.முனியாண்டி, சங்க முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.தமிழ்ச் செல்வன், எஸ்.காமராஜ் (மாவட்ட துணைத் தலைவர்), டி.கலிய மூர்த்தி (மாநிலக்குழு உறுப்பினர்),  ஏ.பி.டி.லோகநாயகி (மாநிலக் குழு உறுப்பினர்), வி.பி.ஞான சேகரன் (மாவட்ட பொருளாளர்), கே.ஆறுமுகம் (மாவட்ட துணைத் செயலாளர்;), எஸ்.திருநாவுக்கரசு (மாவட்டக்குழு-சிஐடியு), ஏ.பி.தனுஷ்கோடி (மாவட்டக்குழு) உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் 7-வது ஊதியக்குழு உத்தரவினை நடைமுறைப்படுத்தி ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகை யை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

;