மன்னார்குடி, ஜுலை 28- கோட்டூர் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் என்.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குடிநீர், சாலைகள் மேம்ப டுத்துதல் மற்றும் சுகாதாரம் குறித்து பேசினர். தலைவர் என்.மணிமேகலை பேசுகை யில், ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 650 குள ங்கள் உள்ளன. அவற்றில் 150 குளங்கள் தூர்வாரப்பட்டு கரைப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் நடப்படும் என வும், லைன்சீஸ் மூலம் தென்னங்கன்றுகள் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார். மேலும் நல்லூர் ஊராட்சியில் மத்திய அரசின் தூய்மை சுகாதாரம் திட்ட த்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது என்றும் என்.ஆர்.ஐ. திட்டத்தின் கீழ் 23 ஊராட்சிகளில் உள்ள 33 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளதென்றும் பேசினார். மேலும் ஒன்றியப்பகுதியில் உள்ள ஊன முற்றோர்களுக்கு ரூ.1,000 நிதி உதவி வழங்கும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கோட்டுரில் மருத்துவ முகாம் நடத்தி வழங்கப்பட்டுள்ளது. இது மாதந்தோறும் வழங்கப்படுமெனவும் கூறினார்.