tamilnadu

img

கொல்லுமாங்குடியில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

குடவாசல், டிச.19- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் ஊரகத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கொல்லுமாங்குடி கடைவீதியில் திமுக திருவாரூர் சட்டமன்ற உறுப்பி னரும், மாவட்டச் செயலாளருமான பூண்டி.கலைவாணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் சின்னத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 1-ஆவது வார்டுக்கு ஷேக் அலாவுதீன், 2-வார்டுக்கு கலிய பெருமாள், 3-வார்டுக்கு வேல்விழி மணிவண்ணன், 4-வது வார்டுக்கு சிவக்குமார், 5-வார்டுக்கு சித்ரா காமராஜ், 6-வார்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் (அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடும்) தியாகு.ரஜினிகாந்த் மற்றும் 7- வார்டுக்கு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், 8-ஆவது வார்டுக்கு ஆசை என்ற முருகேசன், 9- வார்டு மேரி கணபதி, 10- ஆவது வார்டுக்கு அலமேலுமங்கை சீனி வாசன், 11-ஆவது வார்டுக்கு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வரத கோ.ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினரும், த.மு.எ.க. பூந்தோட்டம் வட்ட கிளை செயலாள ருமான ஜெ.முகமது உதுமான் 4 ஆவது வார்டு மாவட்ட கவுன்சில ருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, நாட்டில் இளைஞர்க ளுக்கு வேலையின்மை, பொருளா தார மந்த நிலை, உற்பத்தி தேக்கம் என்று நாடே அல்லல்படும் நிலையில் இருக்கும் போது அனைத்தையும் திசை திருப்பும் விதமாக நாடாளு மன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்கின்ற ஒரே காரணத்தினால் தற்போது நாடாளு மன்றத்தில் எந்தவித விவாதம் இன்றி குடியுரிமை திருத்த மசோதாவை அதிரடியாக கொண்டு வந்து சட்டத்தை நிறைவேற்றி இந்திய மக்களிடம் ஒருமைப்பாட்டை குலை த்து மத ரீதியாக மக்களை பிளவு படுத்தும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டு தல்படி நடக்கும் மோடி தலைமையில் உள்ள பிஜேபி அரசுக்கு துணை யாக நாடாளுமன்றத்தில், மக்களவை யிலும் குடியுரிமை மசோதாவுக்கு வாக்களித்த அனைத்திந்திய அண்ணா திமுக அரசின் அமைச்சர்க ளுக்கு, அதன் கூட்டணி கட்சிக ளுக்கும் சவுக்கடி கொடுக்கும் விதம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னம் மற்றும் அரிவாள் சுத்தி யல் நட்சத்திரம் சின்னத்தில் போட்டி யிடும் நமது வேட்பாளர்களை வெற்றி பெற அனைவரும் மக்களிடம் நேரடியாக சந்தித்து சமரசமின்றி ஊழ லற்ற உள்ளாட்சி அமைப்பு அமைக்க அனைத்து வேட்பாளர்களையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற ஒன்றாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்று  சொல்லி பொதுமக்களிடம் வேட்பா ளர்களை அறிமுகப்படுத்தி பேசி னார். இந்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, கட்சி யின் தமிழ் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி, திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் வரத.ஆனந்த், தெற்கு ஒன்றியச் செயலாளர் மனோகரன், மதிமுக ஒன்றிய  செயலாளர் சிவா, விசிக ஒன்றியச் செயலாளர் சேது ராமன், மாவட்ட துணை தலைவர் கணேசன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஜெயக்குமார், சிபிஐ ஒன்றிய செயலாளர் தீன.கெவுதமன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சலாவுதீன், ஒன்றியத் தலைவர் வரத.வசந்தபாலன், செயலா ளர் சி.ஜெயசீலன், மாதர் சங்க ஒன்றி யச் செயலாளர் அம்சம் உள்ளிட் டோர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள், தோழமை அமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன் நன்றி கூறினார்.