கரூர், மார்ச் 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட வூர் வட்டக் குழுவின் சார்பில், நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஏப்ரல் 2 அன்று மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி தலைமையில் தரகம்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற உள்ளது. . வட்டச் செயலாளர் பி.பழனிவேல் வர வேற்கிறார். வட்டக்குழு உறுப்பினர் பி. வேல்முருகன் முன்னிலை வகிக்கிறார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கட்சி நிதியை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சக்தி வேல் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்ற னர். மேலும் மாவட்டச் செயற்குழு, மாவட் டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், கட்சி உறுப்பி னர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் மாலை 3 மணிக்கு புதுகை பூபாலன் கலை நிகழ்ச்சி நடைபெற வுள்ளதாக கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.