மன்னார்குடி: திருவாரூர் மண்டலத்தின் கீழ் செயல்படும் நாகை மாவட்டம் எட்டுக்குடியில் இந்தியன் வங்கியின் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. நாகை மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.எஸ். பிரசாத் புதிய கட்டி டத்தை திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசும் போது இந்தி யன் வங்கியின் சேமிப்பு, கடன், காப்பீடு மற்றும் இதர வங்கி சேவைகளை இக்கிராம மக்கள் சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என்றார். மேலும் புதிய ஏ.டி.எம் மையத்தையும் தொடங்கி வைத்தார். விழாவில் எட்டுக்குடி மற்றும் திருவாரூர் மண்டலத்தில் உள்ள நாகை மாவட்ட பல்வேறு கிளைகள் மூலம் விவசாயம், சிறுதொழில், வியாபாரம், தனிநபர் கடன்கள் ஆகியன பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டல மேலாளர் எம்.ராஜாமணி, சிறப்புரையாற்றினார். விழா நிகழ்ச்சிகளை திருவாரூர் மண்டல மார்க்கெட்டிங் அலுவலர் எஸ்.அசோக்குமார் தொகுத்து வழங்கினார். முன்னதாக வங்கியின் திருவாரூர் துணை மண்டல மேலாளர் மு.செல்வநாயகம் வரவேற்க, எட்டுக்குடி கிளை மேலாளர் என்.மோகன் நன்றி கூறினார். வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.