திருவாரூர், ஜூன் 8- திருவாரூர் தாலுகா ஆத்தூர் ஊராட்சி, ராதாநல்லூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர். கட்சியின் கொடியினை மாநிலக்குழு உறுப்பி னர் வி.மாரிமுத்து ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் பி.மாதவன், ஜி. பவுன்ராஜ், கே.எச்.கோசிமணி, ஜெ.வான தீபன், சாரங்கபாணி, ஆர்.ஆனந்த், முருகை யன், சிவன்செயல் (வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.