tamilnadu

img

தேவையான பணியாளர்களை நியமித்திடுக! போக்குவரத்து ஊழியர்கள் வாயிற்கூட்டம்

திருவாரூர், பிப்.12- 14-வது ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும், 240 நாட்கள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைபடி தொகையை உடனடி யாக வழங்க வேண்டும், பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து பணி வழங்க மறுப்பதை நிறுத்த வேண்டும், பேருந்து களுக்கு தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும்,  01.04.2003-க்கு பிறகு வேலையில் சேர்ந்தவர்களை ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட வாயிற் கூட்டம், திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தலை வர் பி.முருகன் தலைமையில் நடைபெற்றது.  சிஐடியு மத்திய சங்க பொதுச் செயலாளர் ஜி.மணிமாறன் முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்து சங்க கவுரவத் தலைவர் ஆர்.மனோகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.சந்திரசேகரஆசாத், ஏஐடியுசி போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் கோவி.நாதன், ஏஐடியுசி மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜி.சந்திரசேகர், எச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் ஜி.முருகேசன், சிஐடியு துனைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.ஆர்.ராஜேந்திரன், எஸ்.வைத்தியநாதன், ஏ.கோவிந்தராஜ், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் எம்.தர்மலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்க  ளிலிருந்து நூற்றுக்கணக்கான போக்கு வரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.