மன்னார்குடி, ஜூன் 21- லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களுக்கு முத்துப்பேட்டை யில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன் னாள் படை வீரர்கள் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்திய விமானப் படை அதிகாரி கள் சங்கத்தின் தஞ்சை பிராந்திய தலைவர் பிளைட் லெப்டினண்ட் பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். சார்ஜெண்ட் என்.ராஜ்மோகன் முன்னுரை ஆற்றினார். சிவ பாலசுப்பிரமணியன், ஆர்.ராஜாராமன், கே.நடராஜன், சிவசிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.