tamilnadu

img

குடவாசல்: அத்தியாவசியப் பொருட்களை தரமாக வழங்கிடுக - மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாடம்!

குடவாசலில் உள்ள நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடு இன்றி வழங்கக் கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் தட்டுப்பாடு இன்றி, தரமாக வழங்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நகரக்குழுத்தலைவர் பா.பமீதா தலைமையில் இன்று (ஆக.20) குடவாசல் அண்ணா தெற்கு வீதியில் உள்ள அமுதம் அங்காடி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாதர் சங்கத்தின் நகரச்செயலாளர் டி.ஜி.தமிழ்செல்வி, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் அம்பேத்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.