மன்னார்குடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை சார்பில் அந்தோணியார் கோவில் தெரு பூக்கொல்லை ஆறாம் நம்பர் வாய்க்கால் தெரு, தெப்பக்குளம் இரண்டாவது வார்டு ஆகிய பகுதிகளில் உள்ள முறைசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நகர குழு உறுப்பினர் கே.அகோரம் தட்சிணாமூர்த்தி, விவசாயிகள் சங்க நகர செயலாளர் ஜி.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நன்கொடையாளர்கள் எம்.ஜி. வெங்கட்ராஜன், ஆர்.தாமோதரன், வி.கோவிந்தராஜ், சோம சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.