திருவாரூர், ஜூன் 3-திருவாரூர் வட்டம் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களை ஆட்சியர் த.ஆனந்த் வழங்கினார். மாவட்டகல்வி அலுவலர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்டத்திற்குட்பட்ட 664 அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 30,878 மாணவ- மாணவிகளுக்கும், 237 அரசு, அரசு உதவிபெறும் 80 உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் 36,897 மாணவ- மாணவிகளுக்கும், அரசு, அரசுஉதவிபெறும் 89 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 43,232 மாணவ- மாணவிகளுக்கும் பாடநூல்கள் வழங்கப்படுகிறது.