திருவாரூர், மே 16- திருவாரூர் மாவட்டம் வடகரை, அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ், ஜூனியர் ரெட்கிராஸ், தமிழ்நாடு பாரம்பரிய சித்த மருத்துவ கூட்டமைப்பு சார்பாக உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் கபசுரக் குடிநீர் சுமார் 325 நபர்களுக்கு வழங்கப்பட்டது. கைகழுவுதலின் அவசியம் மற்றும் கைகழுவும் முறைகள் பற்றிய துண்டு பிர சுரம் வழங்கப்பட்டது. 50 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமாவு பாக்கெட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடகரை அரசு உயர் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.முத்து ராமலிங்கம், பள்ளியின் ஜேஆர்சி ஆலோ சகர் சு.நளாயினி, வடகரை ஊராட்சி தலைவர் மலர்மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழத் தலைவர், துணைத்தலைவர், மாவட்ட ஜே.ஆர் மாவட்ட கன்வீனர் இரா.செந்தில் குமார், ஜே.ஆர்.சி பொறுப்பாசிரியர்கள் இர. சரவணக்குமார், ப.விவேகானந்தன், சித்த மருத்துவ கூட்டமைப்பு உறுப்பினர்கள் முருக தாஸ், வழக்கறிஞர் இராஜேந்திரன், லிம்கா மோகன் கலந்து கொண்டனர்.