tamilnadu

img

ஷட்டர் அமைக்காததால் வீணாகும் தண்ணீர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

மன்னார்குடி, அக்.23- மன்னார்குடி வருவாய் வட்டம் கூப்பாசிக் கோட்டை கொண்ணை யடி ஏரியில் கரைகளை சீரமைத்து, பழுது அடைந்த பாசன வாய்க்கா லில் அமைந்துள்ள முகப்பு பாலத்தை சரி செய்து தண்ணீரை தேக்கும்  ஷெட்டர் (தண்ணீரை தேக்கும் இரும்பு கதவு) அமைக்க பொது பணித் துறை மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு வேலைகள் நடைபெற்று  வந்தது. மூன்று மாதத்திற்கு முன்பு பாலத்தின் வேலைகள் முடிக்கப் பட்டது. ஆனால் ஷட்டர் அமைக்கப் படவில்லை. ஏரியில் கரையை சீரமைக்கும் பொழுது அகற்றப்பட்ட காய்ந்து பட்ட மரங்கள் ஏரிக்குள் கிடக்கின் றன. அவைகள் அகற்றப்பட வில்லை. பொதுமக்களின் பயன் பாட்டிற்காக படித்துறை அமைக் கப்படமாலும் இருக்கிறது இது குறித்து அநேக முறைகள் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் முறை யிட்டும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தற்பொழுது தொடர்ந்து பெய்து வந்த மழைக் காரணமாக ஏரியில் தண்ணீர் பெருகி வந்துள் ளது. இதனால் ஏரியிலுள்ள மரங்கள் மிதந்து தண்ணீர் சென்று பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை அடைக்க வாய்ப்புள்ளது.  மேலும் ஷட்டர் அமைக்காமல் இருப்பதால் ஏரியில் முழுமையாக தண்ணீர் சேமிக்க முடியாமலும் பாசன வாய்க்காலில் முழுமையாக நீர் செல்வதால் சமீபத்தில் நடவு செய்யப்பட்ட பல ஹெக்டேர் பயிர் கள் மூழ்கும் அபாயம் உருவாகி உள்ளது. கனமழை பெய்து வெள் ளம் ஏற்பட்டால் அகற்றப் படாமல் இருக்கும் மரக்கிளைகள் வடிகால் வாய்க்கால்களை அடைத்து கொள்ளும் நிலைமை இருக்கிறது எனவே பொதுப்பணி துறை கவ னத்தில் எடுத்து கொண்டு போர்க் கால அடிப்படையில் செயல்பட்டு ஷட்டர் அமைக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வறட்சி வெள்ளம் புயல் காரணமாக திருவாரூர் மாவட்ட விவ சாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் விரக்தியில் இருந்து வந்தனர். இந்த ஆண்டு நெல் சாகு படியின் துவக்கம் நிம்மதியை தந்துள்ளது. நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது. மேட்டூரில் தண்ணீர் இருப்பு நீண்ட காலத்திற்கு பிறகு நம்பிக்கையளிப்பதாகவும் நிறை வளிக்கும் நிலையில் உள்ளது. இந் நிலையில் ஏரிகள் குளங்கள் அவை களின் மதகுகள் ஷட்டர்களை கண்காணித்து பழுது பார்த்து நீர் மேலாண்மையை பாதுகாத்து பய னுள்ளதாக்க வேண்டியது அர’சு அதிகாரிகளின் தலையாய கடமை யாகும்.  இதுபற்றி கூப்பாச்சிக்கோட்டை ஊராட்சியின் விவசாயியும் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளருமான யு.எஸ். பொன்முடி கூறும்போது கூப்பாசிக் கோட்டை கொண்ணையடி ஏரி யின் மதகு ஷட்டர் இனியும் கால தாமதமின்றி அமைக்கப்பட வேண்டும். விவசாயத்தில் விவ சாயிகள் எல்லாம் ஆர்வத்துடன் தீவி ரமாக ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் மேலும் தாமதம் செய்தால் மக்கள் போராட்டங்களுக்குச் செல்வதை தவிர வேறு வழியில்லாத நிலை உருவாகிவிடும். போர்கால அடிப்ப டையில் பொதுப்பணித்துறை அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கூறினார். கூப்பாச்சி கோட்டை ஊராட்சி பகுதி மக்களும் விவசாயிகளும் இதே உணர்வு நிலையில்தான் உள்ளனர். பொதுப் பணித்துறை நடவடிக்கை எடுக் குமா?