tamilnadu

புதிய நிர்வாகத்தின் திடீர் கட்டுப்பாடுகளால்  பள்ளி மாணவர்கள், பெற்றோர் கடும் அவதி

குடவாசல், டிச.19- திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று. இப்பள்ளி கடந்த சில நாட்களுக்கு முன் வேறு ஒரு நிர்வாகத்திடம் விற்கப்பட்டது. அதனைய டுத்து புதிதாக பொறுப்பேற்று கொண்ட பள்ளி நிர்வாகம் மாணவிகள் கொழுசு, வளை யல், சங்கிலி உள்ளிட்ட நகைகளை அரசின் உத்தரவிற்கிணங்க பள்ளிக்கு வரும் போது அணிந்து வரக் கூடாது, பூ வைத்துக் கொள்ள கூடாது, ஆறாம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவர்கள் தற்போது அணிந்து வரும் முழுக்கை சட்டையை அரைக்கை சட்டையாக மாற்ற வேண்டும், பள்ளிக்கு மாணவ, மாணவிகள் பெற்றோர்களின் வாகனங்களில் வரக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை புதிய நிர்வாகம் கெடுபிடி காட்டியது.  இந்த கல்வி ஆண்டு முடியும் வரை பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பள்ளியிணை முற்று கையிட்டனர். முன்னதாக பள்ளி வாகனம் உள்ளே செல்வதை எதிர்த்து கேட்ட பெற்றோர் மீது வலங்கைமான் காவல் நிலை யத்தில் புதிய நிர்வாகத்தின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் காவல் துறையினர் மற்றும் தாசில்தார் தெய்வ நாயகி ஆகியோர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பெற்றோர்கள் பள்ளியின் புதிய தாளாளர் வந்து உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறி பள்ளியின் எதிரே கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூன்று மணிநேர காலதாமதத்திற்கு பின் பள்ளிக்கு தாளாளர் வந்த போது காவல்துறையில் பெற்றோர் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும் என கோஷ மிட்டனர். பெற்றோர்களின் கோரிக்கைக்கு உரிய உத்தரவாதம் அளிக்காத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி சுகுமாறன் வியாழக்கிழமை பள்ளியில் பி.டி.ஏ கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கல்வி ஆண்டு முடியும் வரையில் பழைய முறையே பின்பற்றப்படும் என்று கூறினார். அதனையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.  ஆனால் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் (பிடிஏ)கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மேலும் மாணவர்கள், பெற்றோர்கள் கலக்க மடைந்தனர்.