tamilnadu

சிபிஐ தலைவர் குறித்து அவதூறு பதிவு

திருத்துறைபூண்டி, ஜூலை 20- ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொ றுப்புகள் வகித்து தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு  வித்திட்டவரும், நாகை நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை நாடா ளுமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் சேவை பணியாற்றிய சித்த மல்லி எஸ்.ஜி.எம் என்று அழைக்கக்கூடிய எஸ்.ஜி.முருகையனைப் பற்றி  அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட மன்னார்குடியில் உள்ள பிர பல அரசியல்வாதியின் மகன் ஜெய் ஆனந்தனை காவல்துறை உடனடி யாக கைது செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயி றன்று காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.உலகநாதன் தலைமை வகி த்தார். ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், மாவட்டக் குழு உறுப்பினர்கள்  பி.வி. சந்தரராமன், ராஜா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.