மன்னார்குடி/அறந்தாங்கி, ஆக.31- தமிழகத்தில், திரு வள்ளூர், திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, உள்ளி ட்ட மாவட்டங்களில் சுதந்திர தின நாளில் தலித் மற்றும் அருந்ததிய ஊராட்சி மன்ற தலைவர்களை ஜனநாயக கடமை செய்யவிடாது தடுத்த சாதி ஆதிக்க வர்க்க த்தினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்க ளன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி
மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் கிளைத் தலை வர் இரா.இயேசுதாஸ் தலை மை வகித்தார். செயலாளர் கே.பிச்சைக்கண்ணு கண்டன உரையாற்றினார். முத்துப்பேட்டையில் கே.வி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செயலா ளர் கே.தமிழ்மணி கண்டன உரையாற்றினார். அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்னணி ஒன்றிய செயலாளர் ஏ.கணேசன் தலைமை வகித்தார். திரு த்துறைப்பூண்டியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அரசு. தாயுமானவன் தலைமை வகித்தார். அரியலூர் மாவ ட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தீண்டா மை ஒழிப்பு முன்னணி ராதா கிருஷ்ணன் தலைமை வகி த்தார். சிபிஎம் மாவட்ட செய ற்குழு உறுப்பினர் மகாரா ஜன் கண்டன உரையாற்றி னார்.