திருத்துறைப்பூண்டி, ஜூலை 23- கொரோனா பரிசோதனை மையங் களை அதிகப்படுத்த கோரியும், நீடா மங்கலத்தில் மாதர் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தி யவர்களை உடனே கைது செய்யக் கோரியும் ஜனநாயக மாதர் சங்கத்தின் நகர குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் திருத்துறைப்பூண்டி நகர செய லாளர் கோதாவரி தலைமையில் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோமதி கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் பவானி, நகர துணை தலைவர் கே.மலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் குடவாசல் நீடாமங்கலத் தில் உள்ள அரசு மருத்துவமனை அருகே கேப்டன் லட்சுமி நினைவு தினத்தை யொட்டி மாதர் சங்க நீடாமங்கலம் ஒன் றிய செயலாளர் ஆர்.சுமதி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தில் தமிழரசி, ஜானகி, பாப் பாம்மா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் ஒன்றியம் கோமலில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் பா. கோமதி தலைமையேற்றார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடியில் அரசு மருத்துவமனை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஸ்டெல்லாமேரி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் பி.சுசீலா, பொருளாளர் எஸ். பாண்டிச்செல்வி, ஒன்றியப் பொருளா ளர் அன்னலெட்சுமி பேசினர். புதுக்கோட்டையில், மாதர் சங்க மாவட்ட குழு அலுவலகத்தில் கேப்டன் லெட்சுமி அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காமராஜ புரத்தில் கிளை செயலாளர் சண்முக வடிவு தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் டி.சலோமி சிறப்புரையாற்றி னார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப் பேட்டை ஒன்றியம், பூண்டி ஆரம்ப சுகா தார நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட் டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி தலைமை வகித்தார். சங்க ஒன்றியத் தலைவரும், அம்மாப்பேட்டை ஒன்றிய 8 ஆவது வார்டு ஒன்றிய கவுன் சிலருமான என்.வெற்றிச் செல்வி நம்பி ராஜன், சங்க ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஜி.வசந்தி, ஆர்.கிருஷ்ணகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்க டையூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க வட்டத்தலைவர் ஷண்முகவள்ளி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜி.கலைச்செல்வி, வட்டத் துணை செயலாளர் கண்ணகி, துணைத் தலைவர் சுதா, குணசுந்தரி உரையாற்றி னர். சங்கரன்பந்தலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஆர்.ராணி தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் ஜி.வெண்ணிலா, வட்டக்குழு உறுப்பினர்கள் ரோஸ்லின்மேரி, ஞான சௌந்தரி, பேபி உரையாற்றினர்.