tamilnadu

தமிழக அரசின் அலட்சியப் போக்கிற்கு கண்டனம்

 திருவாரூர், ஜூன் 24- சாதி ஆணவ படுகொலையால் உயிர் நீத்த உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தமிழக அரசின் அலட்சியப் போக்கை கண்டித்தும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து திருவாரூரில் ஆட்சியர் அலுவல கத்தில் மனு  அளிக்கப்பட்டது. சங்க மாவட்ட தலைவர் கதா.க.அரசு தாயு மானவன், செயலாளர் கே.தமிழ் மணி, பொருளாளர் கே.பிச்சைக் கண்ணு, துணைத் தலைவர்கள் வி. கந்தசாமி, கே.கோபிராஜ் ஆகியோர் குழுவாகச் சென்று ஆட்சியரின் தனி உதவியாளர் நாகராஜிடம் மனுவை அளித்தனர்.