குடவாசல், மார்ச் 5- தீக்கதிர் திருவாரூர் மாவட்ட நிருபர் எஸ்.நவமணியின் தாயார் சௌந்தரி ஞானம்பாள் (90) உடல் நலமின்றி இருந்தார். அவர் புதன்கிழமை மாலை காலமானார். அவரது உடல் திருவாரூர் அருகே பவுத்திரம் மாணிக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பில் உள்ள தோழர் நவமணி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைவுச் செய்தி அறிந்த சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி தீக்கதிர் மதுரை பதிப்பு பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், திருச்சி பதிப்பு பொது மேலாளர் எஸ்.பன்னீர்செல் வம் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் மற்றும் டெல்டா மாவட்ட நிருபர்கள், சங்கத்தின் நிர்வாகிகள், தீக்கதிர் நிருபர்கள் பெரம்பலூர் மோகன்ராஜ், கரூர் செல்லதுரை, அறந்தாங்கி பால கிருஷ்ணன், புதுக்கோட்டை மதிய ழகன், திருத்துறைப்பூண்டி வேலவன், கும்பகோணம் சரவணன், குடவாசல் நீதிராஜன் உள்ளிட்டோர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின னர், தோழமை சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்கத்தினர் ஆகி யோர் மறைந்த சௌந்தரி ஞானம்பாள் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். சௌந்தரி ஞானம்பாளின் இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான திருத் துறைப்பூண்டியில் உள்ள மடப் புரத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும்.