tamilnadu

img

தோழர் பி.எஸ்.ஆர் நினைவு தினம் சிபிஎம் - சிபிஐ பொதுக்கூட்டம்

திருத்துறைப்பூண்டி, அக்.1-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் 58-ம் ஆண்டு பி.எஸ்.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள் கிழமை மாலை பி.எஸ்.ஆர் மணி மண்டபத்தில் உள்ள அவருடைய வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய படங்களை சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன், சி.பி.எம் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும் கட்சியினர் பார்வையிட்டனர். பிறகு அவரது படத்திற்கு மாலை அணி வித்தனர்.  அங்கிருந்து புறப்பட்டு முல்லை யாற்றங்கரையில் உள்ள அவரது நினை விடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வி.தொ.ச ஒன்றிய செய லாளர் எம்.மகாலிங்கம் தலைமை வகித்தார். சிபிஎம் வி.தொ.ச தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ரவி, வி.ச ஒன் றிய செயலாளர் டி.எஸ்.மணியன் முன் னிலை வகித்தனர். சி.பி.ஐ வி.தொ.ச மாநில பொதுச்செயலாளர் நா.பெரிய சாமி பேசினார்.  சி.பி.ஐ தேசியக்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், வி.தொ.ச மாநில செயலாளர் வி. அமிர்தலிங்கம் சிபிஎம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, வி.தொ.ச மாவட்ட செயலாளர் ஆர்.குமாரராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, கே.என்.முருகானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், கே.வி.இராஜேந்திரன், ஒன்றிய செய லாளர்கள் டி.வி.காரல்மார்க்ஸ், வி.டி.கதிரேசன், கு.பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், வி.ச நிர்வாகிகள் எஸ்.தண்டபாணி, எம்.முருகதாஸ், எஸ்.எஸ்.பாலகுரு, எம். ஜெயபிரகாஷ், சி.பி.ஐ சார்பில் மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணி யம், மாநிலக்குழு உறுப்பினர் முன் னாள் எம்.எல்.ஏ கே.உலகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் இரெ. ஞானமோகன், மாநிலக் கட்டுபாட்டுக் குழு எம்.வையாபுரி, ஒன்றிய செய லாளர் அ.பாஸ்கர், நகர செயலாளர் எம்.முருகேசன் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டவர்கள் மேளதாள வாத்தி யங்களுடன் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.

;