திருத்துறைப்பூண்டி, ஜூலை 5- ஒன்றுபட்ட திருத்துறைபூண்டி மண லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு அரும்பாடுபட்டு அந்தக் கிளையின் கட்சி கிளைச் செயலாளராக மற்றும் பல்வேறு பொறுப்பு வகித்த மூத்த தோழர் வி.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் வி.ராமசாமியின் 19 ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி சனிக்கிழமை மணலியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செய லாளர் வி.டி.கதிரேசன் தலைமை வகித்தார். அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி அஞ்சலி செலுத்தினார். இதில் செயற்குழு உறு ப்பினர் கே.என்.முருகானந்தம், தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மா ர்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர் ஆ.பிர காஷ், ஒன்றிய குழு உறுப்பினர் எம்.முரு கதாஸ் மற்றும் அவர்களது குடும்பத்தி னர் நினைவஞ்சலி செலுத்தினர்.