குடவாசல், பிப்.17- திருவாரூர் மாவட்டம் குடவாசல் நகரப் பகுதியில் அமைந்துள்ள நடுத் தெரு காலனியில் சிபிஎம் முன்னாள் கிளைச் செயலாளர் சுந்தரராஜனின் 2-ஆவது ஆண்டு நினைவு தினத்தை யொட்டி புதிய கல்வெட்டு அமைத்து நினைவுக் கொடிக் கம்பத்தில் செங்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகர 1-ஆவது கிளைச் செயலாளர் பி.சாமிநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.பால சுப்பிரமணியன் மறைந்த சுந்தர ராஜனின் நினைவு கல்வெட்டை திறந்து வைத்து புகழ் அஞ்சலி உரை நிகழ்த்தினார். கட்சியின் குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். லட்சுமி செங்கொடியை ஏற்றி வைத்து பேசினார். வாலிபர் சங்கத் தின் சார்பாக அமைக்கப்பட்ட கொடி மேடையில் வாலிபர் சங்கத்தின் கொடியினை மாவட்டத் தலைவர் எஸ்எம்.சலாவுதின் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, வாலிபர் சங்கத் தின் மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலாவுதின் மற்றும் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் டி.சரவணன், வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலை வர் பி.குமரேசன், செயலாளர் கே. பகத்சிங் மற்றும் கட்சியினர், வாலி பர் சங்கத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.