tamilnadu

img

தோழர் டி.பி.ராமச்சந்திரன் நினைவு தினம் அனுசரிப்பு

குடவாசல்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் பத்தாண்டுக்கு மேல் நன்னிலம் வட்ட செயலாளராக பணியாற்றி மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு மக்களிடம் நன்மதிப்பை பெற்ற தலைவர் மறைந்த தோழர் டி.பி.ராமச்சந்திரன். இவர், மறைந்த மூத்த தலைவர் குடவாசல்- சித்தாடி ஜி.விரையன் அவர்களுடன் களப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 28 ஆவது நினைவு தினம் புதன்கிழமையன்று திருமீயச்சூர் உள்ள அவரின் நினைவிடத்தில் நடைபெற்றது. அஞ்சலி நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை வகித்தார். கிளை செயலாளர்கள் ஏ.ராஜகுரு, ஆர்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி செங்கொடி ஏற்றி நினைவிடத்தில் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.  மாவட்ட குழு உறுப்பினர் தியாகு. ரஜினிகாந்த், சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஐ.முகமது உதுமான், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.எம்.லிங்கம், பி.ஸ்டாலின், டி.பி.ராஜா, ஐ.ஹாதி, வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் வரத.வசந்தபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

;