tamilnadu

img

மேட்டூர் அணை நீர் திறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் டெல்டா விவசாயிகள்....

திருவாரூர்:
கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்காகத் திறக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை மே 18 ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான நாளில் அணையில் சுமார் 65டி.எம்சி நீர் இருப்பு இருந் தது. அதேபோல் இந்த ஆண்டும் குருவை சாகுபடிக்கு அணையை திறக்கும் வகையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. மே 26 ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர் மட்டம்97 அடியாக இருந்தது. அணையில் சுமார் 62 டி.எம்.சி நீர் இருப்பு தற்போது உள்ளது. ஆகவே,மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப் படும் என்ற அறிவிப்பை தற்போதைய முதல்வர்மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

 அணை திறக்கப்படும் அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீரைக் கொண்டு நெல் நாற்றங்கால்தயார் செய்யும் பணிகளை விவசாயிகள் முன் கூட்டியே நம்பிக்கையுடன் தொடங்குவார்கள். மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கேஇ பன்னீர்செல்வம்உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூரில் கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்றது. எனினும் இந்தக் கூட்டம் நடைபெற்று 15 நாட்களுக்குப் பிறகும் அணை திறப்பு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் ஒரு பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கிவிட்டனர்.ஆழ்துளை கிணறுகளின் உதவியால் இதுவரை 68,500 ஏக்கரில் சாகுபடி செய்வதற்கு நாற்றுவிடப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய4 மாவட்டங்களில் மட்டும் சுமார் 56 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்கப்பட்டால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கருக்கும் மேல் குறுவை நெல் சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாகதஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் சுமார் 3 லட்சத்து50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது. தற்போது மேட்டூர்அணையில் இருப்பில் உள்ள நீர், 50 நாட்கள்பாசனத்துக்கு போதுமானது என்று கருதப்படுகிறது.கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட் டுக்கு ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 9.19 டி.எம்.சி., ஜூலை மாத பங்கீடு 31.24 டி.எம்.சி.,ஆகஸ்ட் மாதத்துக்கான 45.95 டி.எம்..சி. நீரைகேட்டுப் பெற வேண்டும் என்று விவசாய சங்கஅமைப்புகள் மற்றும் அதன் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையும் இயல்பான அளவில் பெய்யக் கூடும் என வானிலை கணிப்புகள் கூறுகின்றன. இதன் காரணமாக, வரும் சாகுபடி ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கை நிலவுகிறது. குறுவை பணிகளை முன் கூட்டியே தொடங்கினால்தான், வட கிழக்கு பருவமழையால் பாதிக்காத வகையில் அறுவடைப் பணிகளை விவசாயிகளால் மேற்கொள்ள முடியும்.

இந்நிலையில், மேட்டூர் அணை திறப்புதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்மே 25 அன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆகவே, மேட்டூர் அணை திறப்புக் கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகக் கூடும் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.தற்போது இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் நாட்டின்நலன் கருதி உணவு பொருட்களை உற்பத்திசெய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு செயல்பட முன்வர வேண்டுமென்று அனைத்து தரப்பு விவசாயிகளும் எதிர்பார்க் கின்றனர். 

தொகுப்பாளர் : ஆரூரான்

;