tamilnadu

img

வண்ணாரபேட்டை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குடவாசல், பிப்.16- குடியுரிமை திருத்த சட்டத் திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி சென்னை வண்ணாரபேட்டை யில் அமைதியான முறையில் நடை பெற்ற போராட்டத்தில் தாக்கு தல் நடத்திய காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றி யம் சார்பாக கொல்லுமாங்குடி கடைவீதியில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்பாட் டம் நடைபெற்றது.  மாவட்டக்குழு உறுப்பினர் தியாகு.ரஜினிகாந்த், ஒன்றி யக்குழு உறுப்பினர் வரத.வசந்த ராஜன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். போராட்டத்தை ஒருங்கிணைத்த சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஐ.முகமது உது மான் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைசாமி, கே.எம்.லிங்கம், பி.ஸ்டாலின், சீனி.ராஜேந்திரன், எம்.ராம மூர்த்தி, டி.பி.ராஜா, வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் வரத.வசந்தபாலன், செயலாளர் பி.ஜெயசீலன், கொல்லுமாங்குடி அனைத்து ஜமாத்தார்கள், பெண்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு காவல்துறை யை கண்டித்தும், மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சீர்காழி: இதே போல் நாகை மாவட்டம் சீர்காழி அருகே தைக் காலில், சிதம்பரம்- சீர்காழி நெடுஞ் சாலையில் மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் முன்னேற்றக் கழ கம் மற்றும் தைக்கால் ஜமாத் சார்பில் மறியல் போரட்டம் நடை பெற்றது. புத்தூரிலும் சாலை மறி யல் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர் வாகி புகாரி தலைமையில் போராட் டம் நடைபெற்றது.