மன்னார்குடி, ஆக.16- மன்னார்குடி அசோக் சிசு விஹார் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி ஜி.வி.அசோ க்குமார் வரவேற்றார். ஜெசிஐ மன்னார்குடி அமைப்பின் தலைவர் சிவகணேஷ் தேசி யக் கொடியை ஏற்றி வைத்தார். ஜேசிஐ முதன்மையாளர் திருமலைகுமார் சுதந்திர தின உரையாற்றினார். நிகழ்ச்சி யில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்ட னர். மன்னார்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் ‘நாங்கள் மகளிர் வட்டம்’ என்ற மகளிர் நல அமைப்பின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டா டப்பட்டது. தேசியக்கொ டியை மகளிர் அமைப்பின் தலைவர் தெ.சங்கரி ஏற்றி வைத்தார். மன்னார்குடி மின்வாரிய அலுவல கத்தில் நகர உதவி செயற்ப ொறியாளர் சா.சம்பத் தேசியக் கொடியை ஏற்றி வை த்தார். இளநிலை பொறியா ளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வாலிபர் சங்கம்
கோட்டூர் ஒன்றியம் இருள் நீக்கி ஊராட்சியில் தூய்மை காவலர்கள் மற்றும் மாற்று த்திறனாளிகளுக்கு முகக் கவசம், அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. வாலிபர் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சதீஷ் தலைமை வகித்தார்.