tamilnadu

img

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மனுக் கொடுக்கும் போராட்டம்

கொரோனா நிவாரண பேரிடர் கால நிதியாக விவசாய தொழிலாளர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிராம ஊராட்சி செயலாளரிடம் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் ஒன்றியத்தில் புதூர், பின்னவாசல், கூத்தங்குடி, கூடூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மனு அளிக்கப்பட்டது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன் உள்ளிட்டோர் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். 

;