tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

குடவாசல், ஜன.26- திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து ஆலங்குடி கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் என். ராதா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கே. சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.பாலையா, டி. சண்முகம், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.இளங்கோ வன், மாநில குழு உறுப்பினர் மைதிலி, செயற்குழு உறுப்பினர் ஒன்றிய தலைவர் ஜெ.ஜெயராஜ், செயலாளர் பி.விஜய், கட்சி நகர செயலாளர் எஸ்.சாமிநாதன் உள் பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் 
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் தமிழகம் முழு வதும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. இதில் திருவா ரூர் மாவட்டச் செயலாளர் எஸ். ராமசாமி தலைமையில் கையெ ழுத்து இயக்கம் தொடங்கியது. சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.  அனைத்து பகுதி மக்களிட மும் முஸ்லீம் கிருஸ்துவ சிறு பான்மை மக்களிடமும் ஒரு அஞ் சல் அட்டையில் ஐந்து கைழுத்துக் கள் வீதம் ஆயிரகக்கணக்கான கையெழுத்துக்கள் பெறப்பட உள்ளது. பிப்ரவரி முதல் வாரத் தில் அஞ்சல் அட்டைகளை தமி ழக முதல்வருக்கு அனுப்பப்பட உள்ளது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.பழனிவேல், எஸ்.சேகர், மூத்த உறுப்பினர் எஸ். கிருஷ்ணன், கே.ஆர்.அருள் மொழிராஜா (வாலிபர் சங்கம்), ஆர்.ஹரிசுர்ஜித், சந்தோஷ் (மாணவர் சங்கம்) ஆகியோர் உடனிருந்தனர்.

;