tamilnadu

img

கல்லூரிகளில் நேரிடையாக விண்ணப்பங்கள் வழங்கி சேர்க்கை நடத்தலாம்

கல்லூரி கல்வித்துறையில் 7, 9 2020 நாளிட்ட புதிய அறிவிப்பு வெளியாகி  உள்ளது, அதாவது ஒப்பளிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கும் குறைவாக விண்ணப்பங்கள் வந்துள்ள கல்லூரிகளில் நேரிடையாக மாணவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி  சேர்க்கலாம், கல்லூரி கல்வித்துறை உயர் கல்வித்துறை மாநில அரசின் ஏராளமான குழப்படிகளுக்கு மத்தியில் மீண்டும் இப்போது தேர் நிலைக்கு வந்துள்ளது,  இதன்படி, தற்போது விண்ணப்பித்துள்ள பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களது விண்ணப்பத்தினை அவர்களுக்கு தகுதியுள்ள பிற பாடப்பிரிவுகளுக்கு பரிசீலனை செய்யலாம் சேர்க்கை வழங்கலாம்,சுழற்சி ஒன்றில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு அவர்களது விண்ணப்பத்தினை  சுழற்சி இரண்டிலும்  பரிசீலித்து சேர்க்கை வழங்கலாம் ஒப்பளிக்கப்பட்ட மாணவர் இடங்களுக்கு விண்ணப்பங்கள் வராத கல்லூரிகளில் அந்த கல்லூரிகளில்நேரடியாக விண்ணப்பங்களை வழங்கி மாணவர்கள் சேர்க்கையை நிறைவு செய்யலாம், இதுதான் அந்த  அறிவிப்பின்  சுருக்கம்.தமிழகத்தின் கிராமப்புற ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின்  குறிப்பாக  நகரங்களிலிருந்து   தொலை உள் கிராமங்களில் வசிக்கும் இணையவழியில் விண்ணப்பிக்க  வாய்ப்பும்  வசதியும் இல்லாமல்  விண்ணப்பிக்க தவறிய   மாணவர்களின் ஒரு பிரிவினருக்கு   இது நிச்சயம் மகிழ்ச்சியை தரும், என்பதில் சந்தேகமில்லை.  அதுதான் நியாயமும்கூட. ஆனால் தனியார் கல்லூரிகளின் அறுவடைக்கு வழி செய்துவிட்டு தமிழக அரசு அம்பலமாகி இருக்கும் நிலையில் இந்த முடிவுக்கு கடைசி கட்டத்தில் வந்திருப்பது எந்த அளவிற்கு பலனைத்தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

(ந.நி)