திருவாரூர், ஆக.6- ஜாக்டோ- ஜியோ போராட்டத் தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை அரசு காலம் தாழ்த்தாமல் உடனடி யாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் ஆட்சியர் வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.சுவிக்கின் ரான் தலைமை வகித்தார். மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக மாவட்ட தலைவர் மு.ச.பாலு முன்னிலை வகித்தார். மாநில சட்ட ஆலோசகர் ஆர்.ஆண்ட்ரூஸ் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினார்.
கூட்டமைப்பின் நிர்வா கிகள் சு.தியாகராஜன், கே.ஆர். உமாநாத், ஜீ.வீரமணி, கே.தியாக ராஜன், ஜெ.விஜயகாந்த் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதே போல் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜ. ஜெயராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ரகு, மோகன், ஐயப்பன், சகிலா பேசி னர். அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் செல்வராணி, லட்சு மணன், பிரேம்குமார், அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கோரிக்கை மனு முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடம் வழங்கப் பட்டது.