tamilnadu

img

அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

திருவள்ளூர், ஜன.22-
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து திருவள்ளூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்தும், இத்திட்டத்திற்கான கண்துடைப்பு கருத்து கேட்பினை ரத்து செய்ய வேண்டும் எனவும், கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணை போகக் கூடாது எனவும் கூறி மீஞ்சூரில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.பாலா தலைமையில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

;