tamilnadu

img

ஆட்சியர் ஒப்புதல் தந்த இடத்திலிருந்து இருளர் மக்களை அகற்றத் துடிப்பது ஏன்?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள தாடூர் ஊராட்சி சி.எல்.என்.கண்டிகை இருளர் காலனி யில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக 90குடும்பங்கள் வசித்து வந்த னர். 2014-ல் அப்போது பெய்த பலத்த மழையால் குடிசைகள் சேதமடைந்து ள்ளது.பின்னர் அனைவரையும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இப்படி ஒவ்வொரு முறையும்  மழை வெள்ளம் வரும் போதெல்லாம் குடிசை கள் காணாமல் போகிறது. இதனால் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து குளக்கரையில் வசித்து வந்த மக்களுக்கு திருத்தணி வட்டார வளர்ச்சி அதிகாரி  2017-ல் தொகுப்பு வீடுகள் கட்ட 11 நபர்களுக்கு முதல் தவணைக்கான நிதியும் ஒதுக்கினர். ஆனால் அந்த பகுதி குளக்கரை என்பதால் வீடுகள் கட்டக் கூடாது என வருவாய்த்துறையினர் தடுத்தனர்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத்தணி கோட்டாச்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு முற்றுகை, காத்திருக்கும் போராட்டம் என தொடர் போராட்டங்கள் நடத்தப் பட்டன. இப்பிரச்சனை தொடர்பாக திருத்தணி கோட்டாச்சியர், வட்டாச்சி யர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர் இரா.சரவணன், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.தமிழரசன், ஜி.சின்ன துரை, எஸ்.குமரவேல் அந்தோணி ஆகி யோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் திருத்தணி வட்டம் தாடூர் ஊராட்சி எல்.என்.கண்டிகையில் உள்ள வீரகநல்லூரில்  இருளர் இன மக்களுக்கு பாறை புறம்போக்கு நிலத்தில் மறு குடியமர்த்த   முடிவு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வீரக நல்லூரில் குடிசைகள் அமைக்க உள்ள இடத்தை  மாவட்ட ஆட்சியர். கோட்டாச் சியர், வட்டாச்சியர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்ட பிறகு குடிசை கள் கட்டிக்கொள்ள ஒப்புதல் அளித்த னர். ஒதுக்கீடு செய்த இடத்தில் முல்புதர்கள் மற்றும் கரடுமுரடான நிலத்தை பழங்குடியினர் மக்கள் தங்களிடம் இருந்த மூக்குத்தி, கம்பல் போன்ற சிறு நகைகளை விற்று அந்த பணத்தின்  மூலம் ஜெ.சி.பி  எந்திரத்தைக் கொண்டு 11-நாட்கள் உழைத்து அந்த  இடத்தை சீர்படுத்தி யுள்ளனர்.அதன் பிறகு வரு வாய்த்துறையினர் நிலத்தினை அளவீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலின் அதனடிப்படையில் திருத்தணி பிடிஓ,  9-தொகுப்பு வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார்.அதற்கான நிதியும் ஒதுக்கினார். இதனை நம்பி வீடு கட்டி அதில் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற கனவோடு  பழங்குடி இன மக்கள் வீடு கட்ட பல முயற்சி கள் எடுத்து கடன் வாங்கி தொகுப்பு வீடுகளை கட்டினர்.மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடிசைகள் அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். இந்த இடத்தில் கடந்த 7-மாதங்களாக குடிநீர், மின்சாரம், சுகாதாரம், போக்குவரத்து போன்ற எந்த அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் பரிதவிக்கின்றனர்.  திருத்தணி ஆர்டிஒ அலுவலகம் முன்பு சமைத்து உண்ணும் போராட்டம் என அறிவித்த பிறகு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. மின் இணைப்பு வழங்க தடை யில்லா சான்று  வழங்குவதாக உறு தியளித்துள்ளனர்.மற்ற பிரச்சனை கள் தீர்க்கப்படவில்லை.இந்நிலை யில் அண்மையில் மாவட்ட வரு வாய்த்துறை அலுவலர் சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.பின்னர் இங்கு பட்டா வழங்க முடியாது என திடீரென கைவிரித்து விட்டார்.இதனால் பழங்குடியினர் அதிர்ச்சிய டைந்தனர். கனிம வளத்துறை ஒப்புதல் வழங்க மறுப்பதால் டிஆர்ஒ பட்டா வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியையும் நிறுத்த உத்திரவிட்டுள்ளனர்.தற்போது குடியிருக்கும் வீரக நல்லூரி லேயே குடிமனை பட்டா வழங்க வேண்டும்.  வீரக நல்லூர் பகுதிக் கென்று வார்டு உறுப்பினரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  சக்திக்கு மேல் அதிகம்  செலவு செய்து ஏராளமானோர் குடிசைகள் அமைத்துள்ளனர்.மேலும் அவர்களை அலைக்கழிக்காமல் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் ஆகியோர் நேரில் சென்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அந்த இடத்தில் பட்டா வழங்க கனிம வளத்துறை ஒப்புதல் வழங்கவில்லை என்பதால் அங்கு குடியிருக்கும் இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க முடியாது என்றார்.தொகுப்பு வீடுகளை மட்டும் விட்டு விட்டு மற்ற குடிசைகளை அகற்ற வேண்டும் என அவர்கூறியதால் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குடிசைகளை கொளுத்துவதும், வீடுகள் கட்டிக் கொள்ள ஆட்சியரே ஒப்புதல் வழங்கிய பிறகு  குடியி ருக்கும் இடத்தை காலி செய்யக் கோருவதும்   மக்கள் மத்தியில் பலவித ஐயப்பாடுகளை எழுப்பியுள்ளது. இந்த இடத்தை காலி செய்யும் போக்கை கண்டித்து வரும் மார்ச் 26ஆம் தேதியில் திருத்தணி கோட்டாச்சியர் அலுவலுகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்த மலைவாழ் மக்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.                                        பெ.ரூபன்.