tamilnadu

எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி

 திருவள்ளூர், ஆக.14-  திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலை யில் ஆந்திரா வங்கியுடன் இணைந்து ஏ.டி.எம். மையம் உள்ளது.  இந்நிலையில் புதனன்று (ஆக.14) காலை இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதே போல் திரு வள்ளூர்-ஆவடி சாலையில் ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சிண்டிகேட் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். எந்திரம் மற்றும் அதன் எதிரே உள்ள பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம். எந்திரத்தையும் மர்ம கும்பல் உடைத்துள்ளது.ஏ.டி.எம். எந்திரங்களை முழுவதும் உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் கொள்ளை கும்பல் திரும்பிச் சென்று உள்ளது. கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.