திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் உள்ள காந்திநகரில் 50 திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாடகை வீடுகளில் குடியிருந்து வருகிறார்கள். இவர், கறவை மாடுகளை பராமரித்தல், பாசிமணி தொழில் செய்து வருகிறார்கள். கொரோனா காலம் என்பதால் குறைந்த வருவாய் வருவதால் வாடகை கட்ட முடியதா நிலையில் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றி விட்டனர். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக அரசு வழங்கும் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் வீடுகள் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருநங்கைகளுக்கு இந்த திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் பாத்திரங்களை வைத்தும், படுத்துக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.