திருவள்ளூர், மார்ச் 2- அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவிகளை அச்சு றுத்தும் வார்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தி னர் திங்களன்று (மார்ச் 2) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாணவி களுக்கான விடுதி உள்ளது. இந்த விடுதியில் 13 பேர் தங்கி படித்து வருகின்றனர். இங்கு காப்பாளராக இருப்ப வர் அஞ்சலா. கல்லூரியின் வார விடு முறை நாட்களில், விடுதியில் தங்கக் கூடாது. வீட்டிற்கு சென்று விடுங்கள் என காப்பாளர் கூறுகிறார். மேலும் உணவு சரியில்லை, சரியான நேரத்திற்கு உணவு வழங்க வேண்டும் என கேட்டால், ‘ எந்த அதிகாரி யும் என்னை ஒன்றும் செய்ய முடியாது, எங்கு வேண்டு மானாலும் சொல்லுங்கள், கவலையில்லை’, ‘நல்ல உணவு வேண்டும் என்றால் நீங்களே சமைத்து கொள்ளுங்கள்’ என காப்பாளர் கூறுகிறார் என மாணவிகள் சொல்கின்றனர். இது குறித்து கல்லூரி முதல்வரிடம் மனு கொடுத்தும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை என மாணவிகள் கூறுகின்ற னர். இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வம், செயலாளர் வசந்த், துணைத் தலைவர் சுத்தர் ஆகியோர் விடுதி காப்பாளர் அஞ்சலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். அப்போது காவல்துறையி னர் மாணவர் சங்கத் தலை வர்களை அவமரியாதை யுடன் நடத்தினர். மேலும் அவர்களை நகர காவல் நிலையம் அழைத்து சென்ற னர். பின்னர் அங்கிருந்து வந்த மாணவர் சங்கத் தலை வர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த னர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் விடுதி காப்பாளர் குறித்து விசா ரணை செய்து உரிய நட வடிக்கை எடுப்பதாகக் கூறி னார்.