tamilnadu

img

தோல்வி என்பதே கிடையாது மாணவர்களிடம் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேச்சு

பொன்னேரி, ஜன.8- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள ஸ்ரீதேவி தனியார் கல்லூரி யில் ஜெயித்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சி ஜன-7 அன்று நடைபெற்றது.  இதில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆரணி, ஊத்துக்கோட்டை, பாடிய நல்லூர், மாதர்பாக்கம் உட்பட பல்வேறு  இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கல்லூரி முதல்வர் லட்சுமி பதி, செயலாளர் பி.ரமேஷ் ஆகியோர் பேசினர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்வியாளர் பிரின்ஸ்  கஜேந்திர பாபு பேசுகையில் மிகச்  சிறந்த ரவிக்குமார் போன்ற விஞ்ஞானி கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.மாணவர்களுக்கு அடிப்படையில் தோல்வி  என்பதே கிடையாது. மாணவர்கள் எந்த  நிலையில் இருந்தாலும் அடுத்த நிலைக்கு  செல்ல முடியும். மாணவர்களின் மதிப் பெண் மட்டும் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கவில்லை. மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற வர்கள் அல்லது தேர்வில் தேர்ச்சி பெறாத  மாணவர்கள் கூட ஒரு புதிய தேடுதல் இருந்  தால் மிகச்சிறந்த மாணவர்களாக  வரமுடி யும். அது தான் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியின் வெற்றியாகும் என்றார்.

;