திருவள்ளூர், மே 10- திருமழிசையில் அமைக் கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தை திங்கட் கிழமை (மே 11) முதல் செயல்படும் என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையல் கொரோனா பரவியது. இதனைத் தொடர்ந் ச கடந்த 5ம் தேதி முதல் சந்தை மூடப்பட்டது. தற்காலிக சந்தை பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் 311 ஏக்கர் பரப்பரளவிலான துணைக் கோள் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தகடைகள் 20 அடி நீளம் 10 அகலம் என 200 சதுர அடி பரப்பில் சுமார் 6 அடி இடைவெளியோடு அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் குடிநீர், கழிப்பறை, மின் விளக்கு, வாகன நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் அமைக் கப்பட்டுள்ள கடைகளை மே-9 அன்று தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனி சாமி மற்றும் துணை முதல மைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பார்வை யிட்டனர். அப்பகுதியில் வியாபாரிகளுக்குத் தேவை யான அனைத்து அடிப் படை வசதிகளையும் வியா பாரம் செய்யும் நெறி முறைகளையும் கடைப் பிடிக்க அறிவுரை வழங்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டனர் இந்நிலையில் தற்காலிக சந்தை இன்று முதல் பயன் பாட்டிற்கு வரும் என அதி காரிகள் தெரிவித்தனர்.