திருவள்ளூர், மார்ச் 11- திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள கோபாலபுரத்தில் 20-கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வரு கின்றனர். இந்த குடியிருப்பின் அருகே அமைந்துள்ள காட்டில் புதனன்று (மார்ச்11) நண்பகலில் திடீரென தீ பிடித்துள்ளது. இந்த தீ அருகில் இருந்த இருளர் இன மக்கள் வசித்து வந்த சந்திரன்-சாரதாவின் குடிசை தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சாம்ப லானது. இதில் சந்திரன் குடிசையில் இருந்த அரிசி, பாத்திரங்கள், சேமித்து வைத்திருந்த ரூ.12ஆயிரம், துணி மணிகள் என எல்லாம் எரிந்து சாம்பலானது.வீட்டில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைத்ததால் மற்ற குடிசைகள் தப்பித்தன. குடிசை தீயில் எரிந்து சாம்பலானதால் சந்திரன் குடும்பத்தினர் மூன்று குழந்தைகளு டன் நிற்கதியாய் வீதியில் நிற்கின்றனர்.ஆனால் கிராம நிர்வாக அதிகாரி வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்து விட்டு சென்றுள்ளனர். கடந்த நான்கு தலைமுறை யாக குளக்கரையில் வாழ்ந்த மக்களுக்கு மாற்று இடமாக அரசு கொடுத்த இடம் தான் இந்த கோபாலபும். மாற்று இடம் வழங்கி 3-வருடம் ஆகியும் மின்சாரம், சாலை வசதி, குடிநீர் போன்ற எந்த அடிப்படை தேவைகளும் இல்லாமல் வசிக்கின்றனர். தீப்பற்றி எரிந்த குடிசையை அணைக்க வந்த தீயணைப்பு வாகனம் வழியில்லாமல் திரும்பி சென்றுள்ளது அந்த அளவிற்கு ஆபத்து ஏற்படும் போது கூட நெருங்க முடியாத அளவிற்கு மோசமாக நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர். உட னடியாக உரிய நிவாரணம் வழங்குவதோடு, குடிமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக அரசு செய்து கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ஆர்.தமிழரசன், மாவட்ட துணைச் செய லாளர் என்.வஜ்ஜிரவேல் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.