tamilnadu

img

குடிமனை பட்டா கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது மலைவாழ் மக்கள் சங்கம் உறுதி

திருவள்ளூர், டிச. 10-  ஆவடி அருகில் உள்ள நெமிலிச்சேரி யில் 50க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் உள்ளன. இவர்கள் ஒரே வீட்டில் மூன்று தலைமுறைகளாக இரண்டு, மூன்று குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு குடிமனை மற்றும் பட்டா  வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்ற னர். எந்த அரசும் இருளர் இன மக்க ளின் கோரிக்கைகளை நிறைவேற்றா மல் வருடங்களை கடத்தி வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு  அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டது. இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே பயனடைந்தனர். முழுமையாக பட்டாக்கள் வழங்குவ தில்லை. போராட்டத்தில் ஈடுபடும் போது  ஒரு சிலருக்கு மட்டுமே பட்டாக்களை அதிகாரிகள் வழங்கும் நிலை தான் உள்ளது. இந்நிலையில், தங்களில் குடியிருப்புக்கு  அருகில் அண்மையில் இவர்கள் குடிசைகள் அமைத்தனர். இதற்கு  திருவள்ளூர் கோட்டாச்சியர் அனுமதி அளித்துள்ளார். இருந்தாலும் கிராம உதவியாளர் குடிசைகளை அமைக்கக்கூடாது என கூறி குடிசை களை அகற்றியுள்ளார். இந்நிலையில் நெமிலிச்சேரி இருளர் இன மக்கள் குடியிருக்கும் பகுதியில் மழைவாழ் மக்கள் சங்கத்தின் தகவல் பலகை மற்றும் சங்க கொடியேற்றம் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது.  மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்ட செயலாளர் ஆர்.தமிழரசு, மாவட்ட பொருளாளர் எஸ்.குமாரவேல், மாவட்ட குழு உறுப்பினர் எம்.ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது தலைவர்கள் ‘குடிமனை பட்டா கிடைக்கும் வரை எங்களுடைய போராட்டம் ஓயாது’ என்றனர்.