tamilnadu

ராமகிருஷ்ணா மடம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூலை 28- மெய்யூர் கிராமத்தில் ராமகிருஷ்ணா மடம்  ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை வட்டம் மெய்யூரில் அரசிற்கு சொந்  தமான 2.15 ஏக்கர் கிராம நத்தம் நிலத்தை தனி  நபர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதில் அதே கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் பாஸ்க ரன், அதிகாரிகளின் துணையோடு முறை கேடாக அரசு நிலத்தை தன் தாயார் பங்  கஜம்மாள் பெயருக்கு பட்டா பெற்றுள்ளார். அதன்பின்னர் வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.  இந்த சட்ட விரோத பட்டாவை ரத்து செய்ய  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2018ம் ஆண்டு ஊத்துக்  கோட்டை வட்டாச்சியரிடம் மனு அளிக்கப்  பட்டது. அதன்மீது நடவடிக்கை எடுக்காத தால் 15-2-2019 அன்று வட்டாச்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதனை தொடர்ந்து அப்போதைய  வட்டாட்சியர், பிரச்சனைக்குரிய அந்த  நிலத்தை பத்திரபதிவு செய்ய கூடாது என  ஊத்துக்கோட்டை சார்பதிவாளருக்கு கடிதம் அளித்தார்.

ஆனால், அந்த நிலத்தை மீட்க அதிகாரி கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த நிலத்தில் 11.5 செண்ட் இடத்தை அரசு ஒப்பந்தம் என்ற பெயரில் ராமகிருஷ்ணா மடத்திற்கு வழங்கியுள்ளனர். அந்த நிலத்துடன் 25 செண்ட் அரசு நிலத்தை ராமகிருஷ்ணா மடம் ஆக்கிரமித்துள்ளது. இதனை தொடர்ந்து சங்கரன் என்பவர் 40 செண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விற்  பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்றி அங்கு  சமுதாய கூடம், ஆரம்ப சுகாதார நிலையம்  அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று பூண்டி துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் அந்த இடத்தை ஆய்வு செய்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் முன்னுரிமை அடிப்படையில் சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும் என உறுதியளித்து இருந்தார். அதன்படி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு அங்கு சமுதாய கூடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்த, துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன், கிளை செயலாளர் கே.விஜயகாந்த் ஆகியோர் திங்களன்று (ஜூலை 27) மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி யிடம் மனு அளித்தனர்.