திருவள்ளூர், ஆக.17- திருவள்ளூர் மாவட்டம், குன்னமஞ்சேரி கிராமத்தில் ஆரணி ஆற்றின் கரையில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பாசி மணி, ஊசி மணி போன்ற வற்றை விற்பனை செய்தும் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்கள். வறுமையால் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடியாமல் தவித்து வந்தனர். வறுமையையும் மீறி ஒரு சில குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் அவர்களால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இந்நிலையில், பொன்னேரியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அர்ஜூனன் முன்முயற்சியில் உதவி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவை சேர்ந்த சாலமன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் குன்னமஞ்சேரியில் உள்ள 30 நரிக்குறவ குழந்தைகளை வெள்ளியன்று (ஆக.16) சந்தித்து பேசினர். பள்ளிக்கு ஏன் வருவ தில்லை என அவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் ‘போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளிக்கு வர முடிய வில்லை’ என தெரிவித்தனர். உடனே பொது மக்களின் உதவியோடு ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து இவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளியன்றே 30 குழந்தை களும் பள்ளிக்கு ஆட்டோ வில் சென்றனர். பள்ளி ஆசிரியர்களின் இந்த முயற்சியை அப்பகுதி பொது மக்கள் பாராட்டியுள்ளனர்.