tamilnadu

மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி

ஊத்துக்கோட்டை, ஜன.1- ஊத்துக்கோட்டை நேரு பஜார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் புவனேஸ்வரி (14). இவர் ஊத்துக்கோட்டை யில் உள்ள கோதண்டராமன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். செவ்வா யன்று காலை புவனேஸ்வரி  வீட்டை சுத்தம் செய்தார். மாடி பகுதியில் நின்று சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கிழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த புவனேஸ்வரியை மீட்டு திரு வள்ளூர் அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே புவனேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இது குறித்து ஊத்துக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;