tamilnadu

img

சாலையில் மின்விளக்கு அமைக்க மின்ஊழியர்கள் கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 8- வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு செல்லும் சாலையில் மின் கம்பங்கள் அமைத்து, மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீஞ்சூர் அருகே வடசென்னை அனல் மின்  நிலையம், காமராஜர் துறைமுகம், எல் அண்டு  டி, ஐஒசி, பிபிசிஎல் உள்ளிட்ட அரசு மற்றும்  தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு  சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் பணிக்கு வருகின்ற னர். அத்திப்பட்டு முதல் எண்ணூர் செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்கள் பழுதடைந்து கீழே விழுந்து கிடக்கின்றன. பெரும்பாலான இடங்களில் கம்பங்களே இல்லை. இதனால் அந்தச் சாலை இரவில் பயன்படுத்த முடியாத நிலை  உள்ளது. இதனால் அந்தச்சாலையல் சமூக விரோதி களின் நடமாட்டம் அதிகம் உள்ளதால், தொழி லாளர்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். வடசென்னை அனல் மின் நிலையம் அலகு-3 க்கு எதிரில் உள்ள சாலையில் விதிமுறைகளை பின்பற்றாமல் வேகத்தடை அமைத்துள்ளனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பொது போக்குவரத்து இல்லாததால், ஊழியர்கள் பெரும்பாலும் இருச்சக்கர வாகனங்களில் பணிக்கு வருகின்றனர். இருளில் உயரமாக அமைந்துள்ள வேகத்தடையில் மோதி விபத்திற்குள்ளாகின்றனர்.
தீப்பந்தம் போராட்டம்
“அத்திப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சாலை களில் மின் கம்பங்களை அமைத்து, மின்  விளக்குகளை பொருத்த வேண்டும். உயர மான வேகத்தடையை அகற்றி விதிமுறை களின்படி அமைக்க வேண்டும். இதனை விரைந்து செய்யாவிடில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்த உள்ளதாக” தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி வெங்கட்டையா தெரிவித்துள்ளார்.

-பெ.ரூபன்