திடீரென அதிகரிக்கும் இந்த கொடூரமனநிலையை எவ்வாறு விளங்கிக்கொள்வது.
நடுவன் அரசும்,ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியும் மேற்கொண்டுவரும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தேசத்தையே காட்டுமிராண்டிகளின் கூடாரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.தேசத்தை கலாச்சாரப்படுத்துகிற போராட்டம் மிகப்பிரதானமான அரசியல் போராட்டம் என்பதை காலம் உணர்த்திக்கொண்டே இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை
அக்கரப்பாக்கம் கிராமம் பழங்குடி வகுப்பை சேர்ந்த கௌரியின் குடும்பம் பன்றி மேய்க்கும் வேலையை தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றனர் 11/10/2020 மாலை 3.00.மணிக்கு கன்னிகைபேர் ஏரிக்குள் பன்றிகளை மேய்க்க சென்றவர் வீடு திரும்பவில்லை. அடையாளம் தெரியாத சமூகவிரோதிகள் கௌரியை கூட்டு பாலியல் பலாத்கார வன்கொடுமை செய்து அவரை கொலைசெய்து வீசிச் சென்றுவிட்டனர்.
அவரது சடலம் நாகரீக சமூகத்தின் மீது எச்சை உமிழ்கிறது. அய்யோ தோழர்களே கௌரியின் கைகால்கள் உடைக்கப்பட்டுள்ளன.உடலெங்கும் பற்களால் கடித்துகுதறிய காயங்கள்.சாகும் முன் கௌரி எத்தனை கொடூரத்தை எதிர்கொண்டிருப்பார்.
அவர் அணிந்த்திருந்த தாலியையும்
கம்மலையும் கொள்ளையடித்துள்ளனர்
கம்மலை களவாட கௌரியின் காதை அறுத்துள்ளனர்.இறந்த பிறகா அல்லது உயிருடன் இருக்கும் போதா அவர் காது அறுக்கப்பட்டது என தெரியவில்லை.
ஆட்சியாளர்களே நீங்கள் அணிந்திருக்கும் வெள்ளை உடுப்பை உற்றுப்பாருங்கள்.அதில் இரத்தக்கரை படிந்திருப்பதை உணருங்கள்.
இது தொடர்பாக C2 பெரியபாளையம் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் த.கன்னியப்பன் மற்றும் நமது தோழர்கள் நேற்று சடலம் கிடைத்த பொழுதில் இருந்து காவல்நிலையத்தில் மக்களுடன் கலந்துநின்று களப்பணியாற்றினார்.
இரவு 11 மணிக்கு மனம் கலங்கிய நிலையில் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.இன்றும் தொடரவேண்டிய பணியாக இது இருக்கிறது.
#தீஒமு