tamilnadu

img

கொத்தடிமைகளாக இருந்த 130 பேர் மீட்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 
திருவள்ளளூர் மாவட்டம் நத்தம் கிராமத்தில்  ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 130 பேர் கொத்தடிமைகளாக இருந்து வந்தனர். இந்நிலையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நிதிபதி சரஸ்வதி திருவள்ளூர் கோட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு நடத்தி 130 கொத்தடிமைகளை மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்